Ingredients:
மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2 (இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்... கடாய் மசாலா ரெடி) பனீர் - 100 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனை குளிர்ந்த நீரில் போட்டு தனியே எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி. நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக் கலக்கவும். இஞ்சி, பூண்டு வாசனை போனதும் கடாய் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, அதில் பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்துக் கிளறி, லேசாக தண்ணீர் தெளிக்கவும். மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்தும் இறக்கவும். இதேபோல் மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.
மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2 (இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்... கடாய் மசாலா ரெடி) பனீர் - 100 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனை குளிர்ந்த நீரில் போட்டு தனியே எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி. நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக் கலக்கவும். இஞ்சி, பூண்டு வாசனை போனதும் கடாய் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, அதில் பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்துக் கிளறி, லேசாக தண்ணீர் தெளிக்கவும். மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்தும் இறக்கவும். இதேபோல் மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.
No comments:
Post a Comment